ரஜினி மன்னிப்பு கேட்காவிட்டால் வீட்டை முற்றுகையிடுவோம்.! தந்தை பெரியார் திராவிடர் கழகம் எச்சரிக்கை.!

  • துக்ளக் 50-வது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு, பெரியார் தலைமையில் ராமர், சீதை உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாய் எடுத்துச் செல்லப்பட்டது என அவரது பேச்சு சர்ச்சையை கிளப்பியது.
  • இந்நிலையில் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்காவிட்டால் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கோவை ராமகிருஷ்ணன் தலைமையில் அவரது வீடு முற்றுகையிடபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் நடந்த துக்ளக் 50-வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு, அவ்விழாவில் பேசிய அவர், பெரியார் தலைமையில் ராமர், சீதை அவர்களின் உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாய் எடுத்துச் செல்லப்பட்டது எனவும், மேலும் அந்த உருவங்களுக்கு செருப்பு மாலை போடப்பட்டது எனவும் அந்த மேடையில் தெரிவித்திருந்தார். பின்னர் ரஜினியின் இந்த பேச்சிக்கு ஆங்காகே கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதை கண்டித்து கோவை திராவிடர் விடுதலை கழகம் சார்பில் ரஜினி மீது வழக்குப்பதிவு செய்ய காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது நடிகர் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்காவிட்டால் வருகின்ற 23.1.2020 காலை 10 மணிக்கு, தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கோவை ராமகிருஷ்ணன் தலைமையில் அவரது வீடு முற்றுகையிடப்படும், போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்