மோடி மீண்டும் பிரதமரானால் நாட்டின் பொருளாதாரம் மேலும் வலுப்பெறும் – தமிழக பாஜக தலைவர் தமிழிசை

மோடி மீண்டும் பிரதமரானால் நாட்டின் பொருளாதாரம் மேலும் வலுப்பெறும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், தம்பிதுரை பல்வேறு விவகாரங்களில் மாற்று கருத்து கூறினாலும், ஜெயக்குமார் தெளிவாக பேசி வருகிறார். தம்பிதுரையின் கருத்து அதிமுகவின் கருத்தல்ல.மோடி மீண்டும் பிரதமரானால் நாட்டின் பொருளாதாரம் மேலும் வலுப்பெறும்.சென்னையில் ராகுலை பிரதமராக முன்மொழிந்த ஸ்டாலின், கொல்கத்தாவில் ஏன் முன்மொழியவில்லை? என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment