மோடி ,தேவேந்திரா இணைந்து செயல்பட்டால் 1+1 என்பது 11ஆக இருக்கும் – மோடி ..!

மகாராஷ்டிராவில் வருகின்ற 21-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 24-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மோடி பன்வேல் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார் அப்போது பேசிய அவர் , நரேந்திரா மற்றும் தேவேந்திரா இருவரும் ஒன்றாக இணைந்து செயல்படும்போது 1+1 என்பது 2 ஆகாது ,11ஆக இருக்கும் என கூறினார்.
டெல்லியில் ஆட்சியில் ஆட்சியில் கொண்டு வைத்தது போல மகாராஷ்டிராவில் தேவேந்திராவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வாருங்கள் என கூறினார்.மேலும் ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் கிடைக்க அரசு முன்பு அதற்கான திட்டத்தை தொடங்கிவிட்டது. வருகின்ற 2022-ம் ஆண்டுக்குள்  இந்த திட்டத்தின் பணி முடிவடைந்து விடும்.
சேரிப்பகுதி மக்களுக்கு 2 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரும் பணிகள் பன்வேல் பகுதியில் நடந்து வருகிறது என அவர் கூறினார்.

author avatar
murugan