தகாத வார்த்தைகள் பேசும் போட்டி வைத்தால் நிச்சயமாக எனக்கு  தான் முதலிடம் -அமைச்சர் ஜெயக்குமார்

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் .அப்பொழுது அவர் கூறுகையில்,தனிமனித தாக்குதலை துவக்கி வைத்ததே மு.க.ஸ்டாலின். அவருடைய தந்தை கூட இலை மறை காயாய் தான் சாடுவார். எனவே ஸ்டாலின் நாவை அடக்க வேண்டும் . திமுக இதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்,இல்லையென்றால் விளைவுகள் அதிகமாக இருக்கும்.

வி.பி துரைசாமி உள்ளிட்ட தி.மு.கவினர் தகாத வார்த்தைகளால் விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும்  தகாத வார்த்தைகள் பேசும் போட்டி வைத்தால் நிச்சயமாக எனக்கு  தான் முதலிடம்  கிடைக்கும்.எனவே தி.மு.கவினர் நாவை அடக்கிக் கொள்ள வேண்டும். அப்படி இல்லையென்றால் நாங்களும் பேசத் தயார் என்று தெரிவித்தார்.