நான் மட்டும் ஆட்சிக்கு வந்தால்…. அரசியல்வாதிகள் கூட அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற வேண்டும் : சீமான்

நான் மட்டும் ஆட்சிக்கு வந்தால்…. அரசியல்வாதிகள் கூட அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற வேண்டும் : சீமான்

நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால், அரசியல்வாதிகள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என்று  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

 மக்களவை தேர்தல் மற்றும் இடை தேர்தல் நெருங்கி வருகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் எங்கும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அனைத்து கட்சி தலைவர்களும் தேர்தல் பணிகளில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அனைத்து கட்சி தேர்தல் பிரசாரமும் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடலூர் மாவட்ட வடலூரில் நடைபெற்ற கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.

அப்போது அவர் பேசியதாவது, நாட்டில் ஒரு பைசா ஊழல், லஞ்சம் இருந்தாலும் விஷ ஊசி போட்டு கொன்று விடுவேன் என்றும், நாட்டின் முதல் மனிதனுக்கு கிடைக்கும் மருத்துவம், கடைக்கோடி மனிதனுக்கும் கிடைக்க நாம் தமிழர் கட்சி வழிவகை செய்யும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் அவர் பேசியதாவது, ‘ஜெயலிதாவுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அப்பல்லோ மருத்துவமனை செல்கிறார், அதே போல் கருணாநிதி காவேரி மருத்துவமனை செல்கிறார். அப்போது அரசு மருத்துவமனையின் நிலை என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில், ஜெயலலிதா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் 70 நாளில் போன உயிர் 7 நாளில் போயிருக்கும். அந்த அளவிற்கு அரசு மருத்துவமனையில் தரம் இல்லை’ என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

மேலும், நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால், அரசியல்வாதிகள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என சட்டம் கொண்டு வருவோம் என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *