தினகரனை ஒதுக்கினால், அதிமுக ஒன்றிணையும்-திவாகரன்

தினகரனை ஒதுக்கினால், அதிமுக ஒன்றிணையும் என்று அண்ணா திராவிடர் கழக பொதுச் செயலாளர் திவாகரன் என்று தெரிவித்துள்ளார்.

திருச்சியில் அண்ணா திராவிடர் கழக பொதுச் செயலாளர் திவாகரன் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், இனிவரும் காலங்களில் தற்போதைய அ.தி.மு.க.வால் தேர்தலில் வெற்றிபெற சாத்தியமில்லை.தற்போதைய முதலமைச்சர்  பழனிசாமியை பொறுத்தவரை,

ஆட்சியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். ஆனால். அவரால் கட்சியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியவில்லை. அதனால்தான் அ.தி.மு.க அடுத்தடுத்த தோல்விகளைச் சந்தித்து வருகிறது. அ.தி.மு.க-வை ஒருங்கிணைக்க டி.டி.வி.தினகரன் தடையாக உள்ளார்.தினகரனை ஒதுக்கினால், அதிமுக ஒன்றிணையும்  என்று தெரிவித்துள்ளார்.