சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் தங்களின் சொந்த பணத்தை செலவிட்டு பணிசெய்து வருகின்றனர்-பொன்.மாணிக்கவேல்

பழனியில்  சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், வெளிநாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சிலைகளை தமிழகம் கொண்டுவர, நிதியுதவி வழங்காமல் காவல்துறை காலம் கடத்தி வருகிறது.

சிலைகளை மீட்டு எடுத்துவருவது தொடர்பாக அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது, விரைவில் நிதி ஒதுக்கப்பட்டதும், சிலைகள் தமிழகம் கொண்டுவரப்படும்.

கல்லிடைக்குறிச்சியில் கடத்தப்பட்ட நடராஜர் சிலையை மீட்பதில் அரசு அலட்சியமாக இருக்கிறது. சிட்னியில் உள்ள நடராஜர் சிலையை தர அவர்கள் தயாராக இருந்தும் அரசு உதவி செய்யவில்லை. சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் தங்களின் சொந்த பணத்தை செலவிட்டு பணிசெய்து வருகின்றனர் என்று பேசினார்.