நான் யாரையும் பேச விட மாட்டேன்! நடிகர் சதீஷின் ட்வீட்!
நான் யாரையும் பேச விட மாட்டேன்! நடிகர் சதீஷின் ட்வீட்!
நடிகர் சதீஸ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகராவார். இவர் தமிழில், தமிழ்படம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்ததை எதிர்நீச்சல் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
நடிகர் சதீஸ் தனது இணைய பக்கத்தில், பிக்பாஸ் குறித்த பதிவுகளை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், ஷெரீனால் தான் தர்சன் வெளிலயேற்றப்பட்டதாக வனிதா கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த ஷெரீன் கதறி அழுகிறார்.
இந்நிலையில், இதுகுறித்து சதீஸ் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘நீ பண்ணுனது தப்புனு நான் சொல்லல. ஆனா நீ பண்ணுனது தப்பு. உன்னால தர்சன் வெளிய போகல. அனால், சாத்தியமா உன்னால தான் தர்சன் வெளிய போனாரு. எல்லாரும் உங்களது கருத்தை சொல்லுங்க. ஆனா யாரையும் பேச விட மாட்டேன்.’ என பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram