நான் யாஷிகாவுடன் இணைந்து நடிக்க மாட்டேன்! ஐஸ்வர்யா தத்தா அதிரடி!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் நிகழ்ச்சியில், யாஷிகா ஆனந்த் மற்றும் ஐஸ்வர்யா தத்தா இருவரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு பின் இருவருமே நெருங்கிய நண்பர்களாகி விட்டனர்.
இந்நிலையில், ஐஸ்வர்யாவிடம், நீங்கள் இருவரும் இணைந்து நடிப்பீர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பதிலளித்த ஐஸ்வர்யா, யாஷிகா சூப்பரான படங்களில் நடிச்சிருக்கா. அவ இந்த அளவுக்கு வருறதுக்கு ரொம்ப கஷ்டப்பட்டிருக்கா.
நல்ல கதைகள் வந்தா ரெண்டுபேரும் சேர்ந்து நடிக்கலாம்னு நெனச்சிருந்தோம். ஆனா அது இப்ப வேண்டாம்னு  தோணுது. ஏனென்றால், நாங்க ரெண்டுபேரும் ரொம்ப நெருக்கமான தோழிகள். ஒரு படத்துல நடிக்கணும்னா போட்டி போட்டு நடிக்க வேண்டி இருக்கும். அது எங்க நட்பை பாதிக்க வாய்ப்பிருக்கு. அதனால சேர்ந்து நடிக்கிற எண்ணம் இல்லை என கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.