நான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்! பிக்பாஸ் பிரபலம் அதிரடி!

நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையாவார். இவர் தமிழில் கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் நடிகர்  பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இந்நிலையில், இவர் ஜாம்பி படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், ஜாம்பி படத்தில் சண்டை காட்சிகள் டூப் போடாமல், தானே நடித்ததாகவும், கோவையில் அவரது ரசிகர்கள் நலத்திட்ட உதவிகளை செய்தது குறித்தும் பேசியுள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், அவர் அரசியலுக்கு நிச்சயமாக வருவதாகவும், அதன்மூலம் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளதாகவும் கூறியுள்ளார். இவரது இந்த அதிரடி அறிவிப்பு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.