தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிடுவேன் – டிடிவி தினகரன்

சென்னை ராயப்பேட்டையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் புதிய தலைமை அலுவலகத்தை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது அதற்கு முன்பாகவே சசிகலா சிறையில் இருந்து வெளியில் வந்து விடுவார் என்றும் சட்டமன்றத் தேர்தலில் எங்களுக்கு ஆதரவாகவே சசிகலா இருப்பார் என தெரிவித்தார். 

இதையடுத்து மக்கள் செல்வாக்கு உள்ள அமமுகவுக்கு பிரஷாந்த் கிஷோரெல்லாம் தேவையில்லை. 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியிலும், தென் மாவட்டங்களில் உள்ள ஏதேனும் ஒரு தொகுதியிலும் நான் போட்டியிடுவேன் என கூறினார். மேலும் பெரியார், அண்ணாவைப்போல் நடிகர் ரஜினிகாந்துக்கும் ஆட்சி அதிகாரம் பற்றி கருத்து கூறும் சுதந்திரம் இருக்கிறது என்றும் இது அவரது தனிப்பட்ட கருத்து எனவும் குறிப்பிட்டார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்