கராத்தே தியாகராஜனை கட்சியிலிருந்து நீக்க பரிந்துரை செய்தது நான்தான்-கே.எஸ். அழகிரி

கட்சியின் வரம்பை மீறி பேசியதற்காக கராத்தே தியாகராஜன் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி என்னிடம் விளக்கம் கேட்காமலேயே என்னை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்துவிட்டார் என்று குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இந்த நிலையில் கடலூரில் தமிழக காங்கிரஸ் கமிட்டி  தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது  அவர் கூறுகையில்,  கட்சி தலைவர் என்ற முறையில் வேட்பாளர்களை பரிந்துரை செய்ய எனக்கு உரிமை உள்ளது.சிவகங்கை தொகுதி வேட்பாளராக நாசே ராமச்சந்திரனை பரிந்துரை செய்தது உண்மைதான்.
கராத்தே தியாகராஜனை கட்சியிலிருந்து நீக்க பரிந்துரை செய்தது நான்தான்.உட்கட்சி ஜனநாயகம் வேறு, உட்கட்சி குழுவாக செயல்படுவது வேறு. உட்கட்சி குழுவாக யார் செயல்பட்டாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேசினார்.