தோனி அப்படி பேசியது எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது!!கேதர் ஜாதவ் பெருமிதம்

தோனி மராத்தியில் பேசியது உண்மையிலே ஆச்சரியமாக இருந்தது என்று இந்திய அணி வீரர் கேதார் ஜாதவ் தெரிவித்துள்ளார்.

நேற்று  கடைசி மற்றும் 5-வது ஒரு நாள் போட்டி நடைபெற்றது.இந்த போட்டியில் இந்தியா 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்த வெற்றி மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 4-1  என்று கைப்பற்றியது.

இந்நிலையில் தோனி குறித்து இந்திய அணி வீரர் கேதார் ஜாதவ்  தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதில் தோனி மராத்தியில் பேசியது உண்மையிலே ஆச்சரியமாக இருந்தது. வெளிநாட்டில் விளையாடினாலும் தோனி ஸ்டம்புக்குப் பின்னால் நின்றால், சொந்த ஊரில் விளையாடுவது போன்ற உணர்வு இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

 

Leave a Comment