கேப்டனாக எனது பெயரை அறிவிக்கும் போது சந்தோசப்படவில்லை-ரஷித் கான்!

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் சூழல் பந்து வீச்சாளர் ரஷித் கான்  டி 20 போட்டிகளுக்கு மட்டும் கேப்டனாக இருந்தார்.தற்போது டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

இது பற்றி ரஷித் கான் கூறுகையில் , கேப்டனாக எனது பெயரை அறிவிக்கும் போது சந்தோசப்படவில்லை காரணம் நான் ஏற்கனவே துணை கேப்டனாக தான் உள்ளேன்.  அடுத்தது கேப்டன் தான் ?இப்போது கேப்டன் பதவிக்கு மன ரீதியாக தயாராகி விட்டேன்.இது போன்ற பதவிகள் வரும் போது தயாராக வேண்டும்.

என்னால் முடித்த பங்களிப்பை அணிக்காக செய்வேன். உலகக்கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினேம்.எங்களிடம் திறமை உள்ளது.அதை இன்னும் மேம்படுத்த வேண்டும்.கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டால் அதையும் சாதிக்க முடியும் என கூறினார்.

author avatar
murugan