அந்த நேரத்தில் நான் ஊரிலேயே இல்லை..! அமைச்சர் தங்கமணி

அமைச்சர் தங்கமணி, முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ், யாரையோ திருப்திப்படுத்துவதற்காக, ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தங்கள் மீது புகார் கூறியிருப்பதாக, தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் தங்கமணி, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, அப்போலோ மருத்துவமனையில் மாரடைப்பு ஏற்பட்ட நேரத்தில், தான் ராசிபுரத்தில் இருந்ததாக கூறினார். அதேபோல், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, திருவனந்தபுரத்தில் இருந்ததாகவும், அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment