சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள்… தென்னக ரயில்வே அறிவிப்பு…

சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள்… தென்னக ரயில்வே அறிவிப்பு…

சென்னையில் இருந்து திருச்சி, தஞ்சை, கொல்லம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் வரும் 26-ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளதாகவும், இதற்கான முன்பதிவுகள் வரும்  24-ஆம் தேதி காலை 8 மணி முதல் தொடங்கும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

  • சென்னை எழும்பூரில் இருந்து வரும் அக்டோபர் 25-ஆம் தேதி மாலை 5 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 8.45 மணிக்கு கொல்லம் சென்றடையும். பின்,
  • கொல்லத்திலிருந்து அக்டோபர் 26-ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் 3.05 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
  • இதேபோல், திருச்சியில் இருந்து அக்டோபர் 26-ஆம் தேதி இரவு 10.45 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 4.15 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
  • சென்னை எழும்பூரில் இருந்து அக்டோபர் 27-ஆம் தேதி இரவு 11.15 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 4.45 மணிக்கு திருச்சி சென்றடையும்.
  • தஞ்சாவூரில் இருந்து அக்டோபர் 26-ஆம் தேதி இரவு 9.50க்கு புறப்படும் ரயில் மறுநாள் நாள் காலை 4.30 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை அடையும்.
  • சென்னை எழும்பூரில் இருந்து அக்டோபர் 27-ஆம் தேதி இரவு 11.55 மணிக்கு புறப்படும் ரயில் அடுத்த நாள் காலை 6 மணிக்கு தஞ்சாவூர் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
author avatar
Kaliraj
Join our channel google news Youtube