தேர்தல் ஆணையத்திற்கே தேர்தல் நடத்தணும் போல -அமைச்சர் ஜெயக்குமார் நையாண்டி பேச்சு

இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு தேர்தல் ஆணையர் அசோக் லவாசா ஒரு கடிதம் எழுதினார் .அதில் அவர் மோடி மற்றும் அமித்ஷா மீதான தேர்தல் விதிமீறல்கள் குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை .இதனால் நான் இனி எந்த கூட்டத்திலும் பங்கேற்க போவதில்லை என்று தெரிவித்தார் இதற்க்கு பதில் அளித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தேர்தல் ஆணையர்களிடம் கருத்து வேறுபாடு இருப்பது இயல்புதான் என்றார்.

இது குறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேட்டபொழுது ,இது குறித்து அரசியல் கட்சியினர் பேச கூடாது .வேணுமென்றால் நகையச்சுவைக்காக சொல்கிறேன், இதை பார்த்தால் அவர்களுக்கே தேர்தல் நடத்த வேண்டும் என்பது போல உள்ளது என்று  தனது வழக்கமான நகைச்சுவை பேச்சை பேசினார்  .

author avatar
Dinasuvadu desk

Leave a Comment