சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சி – ராகுல்காந்தி கண்டனம்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் மனு தள்ளபடி செய்யப்பட்டது.இதனை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.


இந்த நிலையில் சிதம்பரம் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ  மூலம் சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சி செய்கிறது.சிதம்பரம் விவகாரத்தில் நடைபெற்று வரும் அதிகாரத்தை துஸ்பிரயோகத்தை கண்டிக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.