நான் ஹீரோ ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டதில்லை : சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

நான் ஹீரோ ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டதில்லை : சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 2.0 திரைப்படமானது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது. தற்போது இவர், தர்பார் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சென்னையில் திரைப்பட கதாசிரியர் கலைஞானத்திற்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். இவ்விழாவில் பேசிய அவர், திரைத்துறையில், கதாசிரியர்களுக்கு போதிய ஊதியமோ, அங்கீகாரமோ கொடுப்பதில்லை என்றும், வாடகை வீட்டில் வசித்து வரும் கலைஞானத்திற்கு சொந்த வீடு கட்டி தருவதாகவும் கூறியுள்ளார்.

மேலும், ஹீரோ ஆக வேண்டும் என்று, தான் ஆசைபட்டத்தில்லை என்றும் கூறியுள்ளார். இந்த விழாவில், அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, விஜயபாஸ்கர், இயக்குனர் பாக்யராஜ், பாரதிராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube