#Breaking :காங்கிரஸ் தலைவர் பதவி ராஜினாமா!உடனே புதிய தலைவரை தேர்வு செய்ய ராகுல் வேண்டுகோள்

#Breaking :காங்கிரஸ் தலைவர் பதவி ராஜினாமா!உடனே புதிய தலைவரை தேர்வு செய்ய ராகுல் வேண்டுகோள்

காங்கிரஸ் கட்சிக்கு  புதிய தலைவரை உடனடியாக தேர்வு செய்ய வேண்டும் என்று ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது.காங்கிரஸ் கட்சி தனியாக இந்தியாவில் மொத்தம் 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி அடைந்தது. காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது சொந்த தொகுதியான அமேதியில் தோல்வியடைந்தார். இருந்தாலும் கேரளா வயநாட்டில் முதன்முதலாக போட்டியிட்டு வெற்றி அடைந்தார்.

இதனால் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்வார் என்று செய்தி அதிகம் உலாவி வந்தது.மேலும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்திலும் பதவியை ராஜினாமா செய்ய ராகுல் முன்வந்ததாகவும் ,அதை காங்கிரஸ் கமிட்டி நிராகரித்ததாகவும் தகவல்  தெரிவிக்கப்பட்டது.இதனால் முக்கிய தலைவர்கள் ராகுல் ராஜினாமா தொடர்பாக அவரை சந்தித்து பேசினார்கள்.ராகுல் அவரின் முடிவில் பின்வாங்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

தற்போது காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வது தொடர்பாக ஏற்கனவே கடிதம் அளித்துவிட்டதாக விளக்கம் அளித்துள்ளார் ராகுல்.அவர் வெளியிட்ட அறிவிப்பில் , நான் ஏற்கனவே ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டதால் தலைவராக நீண்டநாள் தொடர முடியாது.மேலும்  தாமதிக்காமல் காங்கிரஸ் கட்சிக்கு உடனே புதிய தலைவர் தேர்வு செய்ய வேண்டும் என்றும் நான் ஏற்கனவே ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டதால் தலைவராக நீண்டநாள் தொடர முடியாது என்று  ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

 

Join our channel google news Youtube