இந்த நோயோடு பல நாட்களாக போராடி வருகிறேன்! பிரபல இந்தி நடிகை ஓபன் டாக்!

இந்த நோயோடு பல நாட்களாக போராடி வருகிறேன்! பிரபல இந்தி நடிகை ஓபன் டாக்!

நடிகை ஷ்ரத்தா கபூர் பிரபலமான இந்திய நடிகையாவார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சாஹோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் அதிகமாக ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில், ‘2013-ம் ஆண்டு இவரது நடிப்பில் உருவாக்கிய ஆஷிப்-2 என்ற திரைப்படம் வெளியானது. அப்போது தான் எனக்கு மன அழுத்த நோய் ஏற்பட்டது. தற்போது இதில் இருந்து விடுபட முடியாமல் போராடிக் கொண்டு இருக்கிறேன். ஆனால், ஆரம்பத்தில் இருந்ததை விட தற்போது பரவாயில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், இந்த நோயில் இருந்து விடுபட மருந்துகளை தேடி செல்வதில் பிரயோஜனம் இல்லை. நான் தினமும் தியானம், யோகா மற்றும் பாடல்களை கேட்கிறேன். இவற்றில் மனதை செலுத்தி, மன அழுத்தத்தில் இருந்து விடுபட போராடி வருகிறேன். இன்று வரை போராடி வருகிறேன் என கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube