நீண்ட நாள் பிறகு என்னை நான் உணர்கிறேன்.!

இந்திய அணியின் துணைகேப்டன் ரோஹித் சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புதிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி, விளையாட்டு வீரர்கள் பலரும் வீட்டிலே முடங்கி கிடைக்கின்றார்கள் , இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக விளங்கு பவர், ரோஹித் சர்மா தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும் இவர், இந்திய அணி சார்பில் பல சாதனைகளை படைத்துள்ளார். மேலும் இவர் ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக இருக்கிறார்.

இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்த இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பூங்காவிற்கு சென்ற ஒரு புகைப்படத்தை எடுத்து அதற்கு மேல் ” மீண்டும் களத்திற்கு வந்ததில் மிகவும் மகிழ்ச்சி. மேலும் சில வேலைகளை முடித்தேன். நீண்ட நாட்களுக்கு பின் நான் என்னை உணர்கிறேன்” என்று அதில் பதிவு செய்துள்ளார்.

 

View this post on Instagram

 

Good to be back on the park getting some work done ???? felt like myself after a long time ✅

A post shared by Rohit Sharma (@rohitsharma45) on

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.