சினிமாவில் எனக்கு நான் தான் போட்டி! இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் முத்திரை இனி எனக்கு இருக்காது : நடிகை யாஷிகா ஆனந்த்

நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் கவலை வேண்டாம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து, துருவங்கள் பதினாறு, பாடம், இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் கமலஹாசன் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இவர் பிரபலமானார்.

இந்நிலையில், இவர் சினிமாவில் தனது நடிப்பு குறித்து கூறுகையில், ‘இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் முத்திரை, இனி எனக்கு இருக்காது என்றும், நான் கவர்ச்சியாக நடித்தாலும் அதில் வக்கிரம் இருக்காது என்றும் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், கவர்ச்சி என்பது அவரவர் பார்வையில் இருக்கிறது என்றும், சினிமாவில் எனக்கு நான் தான் போட்டி என்றும் கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.