என் பேரன் முகத்தை கூட என்னால் பார்க்க முடியவில்லை – சாருஹாசன் கவலை

என் பேரன் முகத்தை கூட என்னால் பார்க்க முடியவில்லை – சாருஹாசன் கவலை

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வருவதால், இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் 15 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுகின்றனர். 

இந்நிலையில், இயக்குனர் மணிரத்னம் – சுகாசினியின் மகன் நந்தன். இவர் இங்கிலாந்திலிருந்து இந்தியா திரும்பியதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தன்னை தானே  தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். 

இதுகுறித்து நந்தனின் தாத்தாவான சாருஹாசன் அவர்கள் கூறுகையில், ‘ என் பேரன் நந்தன்  வந்தால், தாத்தா என என்னை தான் பார்க்க வருவான். இப்பொது அவன் வந்து 10 நாளாச்சு. முகத்தை கூட பார்க்கவில்லை. கஷ்டம்தான். ஆனால், கொரோனாவை விரட்டியடிக்க இது தேவைதான்.’ என  கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube