அந்த அளவுக்கு நான் இன்னும் வளரலப்பா! காமெடி நடிகரின் அதிரடி பேச்சு!

தமிழ் சினிமாவின் முன்னை காமெடி நடிகராக வளம் வருபவர் யோகி பாபு. இவர் தற்போது பிகில், தர்பார் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழ் சினிமாவின் பல முன்னை நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், இயக்குனர் ராஜசேகர் இயக்கும் புதிய படத்தில் இவர் நடிக்கவுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிற நிலையில், யோகிபாபு இப்படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல், தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, இவருக்கு பலரும் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து யோகிபாபு அவர்கள் கூறுகையில், ‘நமக்கு எப்போதுமே நடிப்பு தான். தயாரிப்பாளராக ஆகும் அளவுக்கு இன்னும் வளரவில்லை. நிஜத்தில் நம்ம படம் தயாரிக்கணும்னு ஒரு நாள் கூட யோசித்ததில்லை. எப்படி இப்படி ஒரு செய்தி வெளியானது என்று தெரியவில்லை.’ என கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.