பட்ஜெட் குறித்து பெருமையடைகிறேன்- பிரதமர் நரேந்திர மோடி

மத்திய பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி பட்ஜெட் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், ஏழைகளுக்கான பட்ஜெட் இது. இளைஞர்களுக்கு எதிர்காலத்தை உருவாக்கும் திட்டங்கள் மற்றும் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அறிவிப்புகள் பட்ஜெட்டில் உள்ளது.

மத்திய பட்ஜெட் நாட்டை புதிய பாதையில் கொண்டு செல்லும் பட்ஜெட்டாகவும், விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் பட்ஜெட்டாகவும் உள்ளது. பட்ஜெட் குறித்து பெருமையடைகிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.