ஆந்திராவில் 132 செயலிகளுக்கு தடை..ஜெகன்மோகன் ரெட்டி வேண்டுகோள்.!

ஆந்திராவில் 132 செயலிகளுக்கு தடை..ஜெகன்மோகன் ரெட்டி வேண்டுகோள்.!

ஆந்திராவில் 132 செயலிகளுக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு ஜெகன்மோகன் ரெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்றைய இளம் தலைமுறையினர் பலரும், இணையத்தில் தான் உலா வருகின்றனர். அதிலும் பெரும்பாலானோர் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி உள்ளனர். இந்த விளையாட்டுகளினால், அவர்கள் தங்களது பணத்தை இழப்பதோடு, மன உளைச்சலினால், உயிரையும் மாய்த்து கொள்கின்றனர்.

இந்த ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்யுமாறு பல தலைவர்கள் அறிவுறுத்தி வருகின்ற நிலையில், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, ஆந்திராவில் 132 ஆன்லைன் சூதாட்டம், பந்தயம் மற்றும் கேமிங் தளங்களை தடை செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube