லட்டு மட்டுமே கொடுத்ததால் மனைவிடம் இருந்து விவாகரத்து கேட்ட கணவர்!

உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகி மூன்று குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் கணவருக்கு நோய் ஏற்பட்டுள்ளது.

இதனால்  கணவருக்கு  அவதிப்பட்டு வந்து உள்ளார்.இதை தொடந்து மனைவி ஒரு தாந்திரிகரிடம் சென்று தன்னுடைய கணவரின் நிலையை எடுத்து கூறியுள்ளார். அதற்கு அந்த தாந்திகர் உங்கள் கணவருக்கு  காலை மற்றும் இரவு இரண்டு வேளையும் சாப்பிட லட்டுகளை மட்டுமே கொடுக்கும் படி கூறியுள்ளார்.

இந்நிலையில் தாந்திகர்கூறியபடி தன்னுடைய கணவருக்கு சாப்பிட காலை மற்றும் இரவு இரு வேளையும் லட்டு மட்டுமே கொடுத்து உள்ளார்.வேறு ஏதும் கொடுக்கவில்லை. இதை தொடர்ந்து தனது மனைவியிடமிருந்து விவாகரத்து தரக்கோரி கணவர் குடும்பம் மன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.இதற்கு காரணம் எனது மனைவி சாப்பிட வெறும் லட்டு மட்டுமே கொடுத்து உள்ளார் என கூறினார்.

author avatar
murugan