3 வருடத்திற்கு பிறகு வெளிச்சத்திற்கு வந்த உண்மை.! 1 லட்சம் கொடுத்து மனைவியை கொன்ற கணவர்.!

  • ரமேஷ் , சரண்யா இருவருக்கும் கடந்த 2005-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
  • மனைவி சரண்யா நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் கணவன் ரமேஷ் தனது நண்பர்களான பாட்ஷா , ரகு ஆகியோரிடம்  ஒரு லட்சம் கொடுத்து தனது மனைவியை கொலை செய்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பள்ளத்திவிடுதி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு ஆலங்குடி அண்ணாநகரை சேர்ந்த சரண்யா என்ற என்பவருடன் கடந்த 2005-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு சரண்யா காணாமல் போனதாக சரண்யாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பெயரில் ஆலங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஆனால் சரண்யா வழக்கில் முன்னேற்றம் இல்லாததால் சரண்யா பெற்றோர்கள் மதுரை மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதை தொடர்ந்து நீதிமன்றம் இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க 2018-ம் ஆண்டு உத்தரவிட்டது. பின்னர் இந்த வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீசார் சரண்யா கணவர் ரமேஷ் கொடுத்த தகவலின் சந்தேகம் ஏற்பட்டதால் அவரிடம் தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மனைவி சரண்யா நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் தனது நண்பர்களான பாட்ஷா , ரகு ஆகியோரிடம்  ஒரு லட்சம் கொடுத்து தனது மனைவியை கொலை செய்யுமாறு கூறியதை அவர் ஒப்புக்கொண்டார். சரண்யாவை கொலைசெய்து  சம்ராயன்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு பாழடைந்த கிணற்றில் வீசியதாக அவர் வாக்குமூலம் கொடுத்தார்.

பின்னர் ரமேஷ் தகவல் கொடுத்த இடத்திற்கு சென்ற சிபிசிஐடி போலீசார் ஜேசிபி மூலம் சுமார் 3 மணி நேரம் தோண்டிய  பின்னர் சரண்யாவின் எலும்புக்கூட்டை எடுத்தனர். இந்நிலையில் சிபிசிஐடி போலீசார் சரண்யாவின் எலும்புக்கூட்டை பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர்.

மேலும் கணவர் ரமேஷ் பாட்ஷா மற்றும் ரகு  ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். மனைவியை கணவரே ஆள் வைத்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
murugan