கொள்ளையர்களை சேர்களால் அடித்து விரட்டிய கணவன் , மனைவி !

நெல்லையில் முதியவர்கள் திருடர்களை துரத்தி துரத்தி அடித்த சிசிடிவி காட்சிகள் வெளியானது.

நெல்லை மாவட்டதில் உள்ள கடயத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிப்பவர், சண்முகவேல். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவர், நேற்று இரவு 11.30 மணியளவில், வீட்டின் வாசலில் அமர்திருந்தனர். அப்பொழுது வீட்டிற்குள் வந்த முகமூடி அணிந்த நபர்கள் இருவர், சண்முகவேலை தாக்கினார்.

உடனே அவரும் அவரின் மனைவியும் ,  சண்முகவேலும்  அந்த நபர்களை அங்கிருந்த சேர் மற்றும் இதர பொருட்களை கொண்டு தாக்கினார்கள் . இது தான் சரியான  நேரம் என யோசித்த திருடர்களில்  ஒருவர், அந்த பெண்ணின்  கழுத்திலிருந்த 32 கிராம் நகையை ஆட்டைய போட்டு சென்றனர்.

இது குறித்து கடாயம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, அந்த முகமூடி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.