திண்டிவனம் அருகே பிரமாண்ட உணவு பூங்கா அமைக்கப்படும் – முதலமைச்சர் பழனிசாமி

திண்டிவனம் அருகே பிரமாண்ட உணவு பூங்கா அமைக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியின் புதிய மாவட்ட துவக்‌க விழா நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் பழனிசாமி கலந்து கொண்டு கள்ளக்குறிச்சியின்  மாவட்‌டத்தின் நிர்வாகப் பணிகளை தொடங்கி வைத்தார்.இதன் பின்னர் முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில்,தமிழகத்தில் 31 லட்சம் பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது .அதிமுக அரசுக்கு எதிராக தவறான குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார் ஸ்டாலின்.
திண்டிவனம் அருகே பிரமாண்ட உணவு பூங்கா அமைக்கப்படும்.இதன் மூலம் விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.