ராகுல் காந்தி  பங்கேற்ற நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தது எப்படி?அறிக்கை தர கல்லூரிக் கல்வி நிர்வாக இயக்குனர் உத்தரவு

ராகுல் காந்தி  பங்கேற்ற நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தது எப்படி?அறிக்கை தர கல்லூரிக் கல்வி நிர்வாக இயக்குனர் உத்தரவு

  • காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
  • சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் ராகுல் காந்தி  பங்கேற்ற நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தது எப்படி?  அறிக்கை தர கல்லூரி இணை இயக்குனருக்கு, கல்லூரிக் கல்வி நிர்வாக இயக்குனர்  உத்தரவு பிறப்பித்துள்ளார். 

இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19-ஆம் தேதி தொடங்கி மார்ச் 26-ஆம் தேதி முடிவடைகிறது. மார்ச் 27-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் இதற்கான தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

திமுக கூட்டணியில்  காங்கிரஸ் , மதிமுக , விசிக, மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட்,இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் , கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி , ஐஜேகே ஆகிய கட்சிகள் உள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மார்ச் 13-ஆம் தேதி  தமிழகம் வந்தார்.பின் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடினார்.அதேபோல் நாகர்கோவிலில்  ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவைத்தார்.இதில் ஸ்டாலின் உட்பட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடியது தொடர்பாக கல்லூரிக் கல்வி நிர்வாக இயக்குனர் ரா. சாருமதி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.அதில் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் ராகுல் காந்தி  பங்கேற்ற நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தது எப்படி? என்றும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது எப்படி அனுமதிக்கலாம்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும்  நேரில் விசாரித்து அறிக்கை தர சென்னை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனருக்கு, கல்லூரிக் கல்வி நிர்வாக இயக்குனர் ரா. சாருமதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

 

 

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *