சுவையான தேங்காய்ப்பால் முறுக்கு செய்வது எப்படி?

சுவையான தேங்காய்ப்பால் முறுக்கு செய்வது எப்படி?

நாம் மாலை நேரங்களில் தேநீருடன் சேர்த்து ஏதாவது ஒரு சிற்றுண்டி செய்வது சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான தேங்காய்ப்பால் முறுக்கு செய்வது எப்படி என்று பார்ப்போம். 

தேவையானவை 

  • அரிசி மாவு – 1 கப் 
  • பொட்டுக்கடலை – அரை கப் 
  • தேங்காய் பால் – ஒரு கப் 
  • உப்பு – சிறிதளவு 
  • பெருங்காய பொடி – ஒரு சிட்டிகை 
  • எல் – ஒரு தேக்கரண்டி 
  • சீரகம் – ஒரு தேக்கரண்டி 
  • எண்ணெய் – தேவையான அளவு 

செய்முறை 

முதலில் மேலே குறிப்பிட்டுள்ள அணைத்து பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு தேங்காய் பால்  அணைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து கொள்ள வேண்டும். பின் தேங்காய் பாலை ஊற்றி பிசைந்து கொள்ள வேண்டும். 

தேவைப்பட்டால்  ஊற்றி கட்டியில்லாமல் பிசைந்து கொள்ள வேண்டும். பின்பு முறுக்கு சுற்றும் அச்சில் மாவை வைத்து முறுக்கு பிழிந்து கொள்ள வேண்டும். பின் கடாயில் எண்ணெய் ஊற்றி, சூடேறியதும் முறுக்கை போட்டு பொரித்து எடுக்க வேண்டும். இப்பொது சுவையான தேங்காய்ப்பால் முறுக்கு தயார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube