சுவையான உளுந்தம் பருப்பு ஆடை செய்வது எப்படி?

நாம் தினமும் நமக்கு பிடித்த பல வகையான உணவுகளை கடைகளில் வாங்கி சாப்பிடுவதுண்டு. ஆனால், கடைகளில் வாங்கி உண்பதை விட, நாமே நம் கைகளால் செய்து சாப்பிடுவது தான் சிறந்தது.

தற்போது இந்த பதிவில் சுவையான உளுந்தம் பருப்பு ஆடை செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • புழுங்கல் அரிசி – கால் கிலோ
  • உளுந்தம் பருப்பு – 3 கப்
  • துவரம்பருப்பு – 1 கப்
  • வெங்காயம் – 2
  • காய்ந்த மிளகாய் – 8
  • இஞ்சி – சிறுதுண்டு
  • எண்ணெய் – தேவைக்கேற்ப
  • உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை

முதலில் புழுங்கல் அரிசி, உளுந்தம் பருப்பு மற்றும் துவரம்பருப்பு மூன்றையும் தனித்தனியாக ஊற வைக்க வேண்டும். பின் அரிசியுடன் காய்ந்த மிளகாய், இஞ்சி சேர்த்து ரவை பதத்தில் அரைக்க வேண்டும்.

அதன்பின் உளுந்தம் பருப்பு மற்றும் துவரம்பருப்பை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு மூன்று மாவையும் ஒன்று சேர்த்து அதில் உப்பு சேர்த்து காக்க வேண்டும். மாவில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அதன்பின் தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு மாவை தடிமனாக ஊற்றி சுற்றியும் எண்ணெய் விட்டு மொறுமொறுப்பாக எடுக்க வேண்டும். இப்பொது சுவையான உளுந்தம் பருப்பு ஆடை தயார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.