அசத்தலான இனிப்புக் கொழுக்கட்டை செய்வது எப்படி?

நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே கொழுக்கட்டையை விரும்பி சாப்பிடுவதுண்டு. கொழுக்கட்டை என்பது அதிகமாக நமது வீடுகளில் விளங்க காலங்களில் தான் செய்வது வழக்கம். தற்போது இந்த பதிவில் சுவையான இனிப்பு கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • அரிசி மாவு – 2 கப்
  • வெள்ளம் (பொடி செய்தது) – 1 கப்
  • தேங்காய்த்துருவல் – அரை கப்
  • ஏலக்காய்பொடி – 1 டீஸ்பூன்
  • நெய் – 2 டீஸ்பூன்

செய்முறை

முதலில் வெல்லத்தூளை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் 2 கப் தண்ணீரை சேர்த்து கொதிக்க விட வேண்டும். பின் வெல்லம் கரைந்து, கொதிக்க ஆரம்பித்தவுடன், கீழே இறக்கி அதை வடிகட்ட வேண்டும். வடிகட்டிய வெல்லத்தை  அடி கனமான ஒரு பாத்திரத்தில் ஊற்றி மீண்டும் கொதிக்க விட வேண்டும்.

அதன்பின், வெல்ல நீர் கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை தனித்துக் கொண்டு, வறுத்த அரிசி மாவை சிறிது சிறிதாக அதில் சேர்த்து கிளற வேண்டும். பின் அதில் தேங்காய்த்துருவல், ஏலக்காய்பொடி ஆகியவற்றை சேர்த்து மாவு கெட்டியாகும் வரை கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.

பின் அதை கீழே இறக்கி வைத்து ஆறவிட வேண்டும். மாவு சற்று ஆறியவுடன், கைகளில் சிறிது நெய் தடவிக் கொண்டு, எலுமிச்சம் பல அளவு மாவை எடுத்து உருட்டி, உள்ளங்கையில் வைத்து மூடி சற்று விரல்களால் அழுத்தி கொழுக்கட்டை பிடிக்க வேண்டும்.

பின்பு எல்லா மாவையும் இப்படியே செய்து, நெய் தடவிய இட்லி தட்டில் அடுக்கி, இட்லிபானையில் வைத்து ஆவியில் 10 அல்லது 15 நிமிடங்கள் வேகவைத்து எடுக்க வேண்டும்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.