நீதி கிடைக்கும் என்று எப்படி நம்ப முடியும்?- கனிமொழி கேள்வி

நீதி கிடைக்கும் என்று எப்படி நம்ப முடியும்? என்று கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகன்களான ஜெயராஜ் பென்னிக்ஸ் ஆகியோர் சிறையில் உயிரிழந்த விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பிலிருந்து கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

இதனிடையே சாத்தான்குளத்தில் உயிரிழந்த தந்தை-மகன் மரணம் அப் டெத் இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜு  கூறினார்.அமைச்சரின் இந்த கருத்துக்கு திமுக எம்பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் கருத்து தெரிவித்துள்ளார்.அவரது பதிவில், சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் மூச்சுத்திணறலாலும், உடல்நலக் குறைவாலும் உயிரிழந்தனர் என்று முதல்வர் கூறினார். தற்போது தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் இது லாக்-அப் மரணம் கிடையாது என்று கூறுகிறார். இந்த அரசிடமிருந்து, கொலையாளிகள் தண்டிக்கப்பட்டு நமக்கு நீதி கிடைக்கும் என்று எப்படி நம்ப முடியும்? முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையை காப்பாற்றுவதற்கு முயற்சிப்பது வெளிப்படையாகத் தெரிகிறது என்று தெரிவித்துள்ளார்.