எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க! பெண் வேடம் அணிந்து சிறையில் இருந்து தப்பிக்க முயன்ற கைதி! இறுதியில் அரங்கேறிய விபரீதம்!

பிரேசில் நாட்டை சேர்ந்த, போதை கும்பலின் தலைவன் கிளாவினா டா சில்வா. இவர் போதை பொருள் விற்பதை தனது தொழிலாக கொண்டுள்ளார். இந்நிலையில், இவர் போதை பொருளை வாங்குமாறு கடற்கரை ஓர கிராம மக்களை மிரட்டியும், மூளை சலவை செய்தும் விற்பனை செய்து வந்துள்ளார்.

சில்வா மீது பல குற்றங்கள் இருந்து வந்த நிலையில், பிரேசில் போலீசார் அவரை கைது செய்து சிறையில்  அடைத்துள்ளனர். இவர் சிறையில் இருந்து எப்பிடியாவது தப்பிச் செல்ல வேண்டும் என எண்ணி, அவரை பார்க்க வரும் அவரது மகளை போல வேடமணிந்து, அதற்கான செயல்பாடுகளில் இறங்கியுள்ளார்.

இவர் தன்னிடம் இருந்த செல்வாக்கின் மூலம், பெண்ணை போல வேடமணிவதற்கான அனைத்து மேக்கப் பொருட்களையும் சிறைக்குள் வரவழைத்த நிலையில், அவரது மகள் அவரை பார்க்க வந்த நாளன்று, அவரது இந்த திட்டத்தை அரங்கேற்றியுள்ளார்.

பெண்ணை போல வேடமணிந்து சிறையில் இருந்து வெளியே வந்த சில்வா மீது போலிஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. உடனடியாக அவரை விசாரித்த போது, சில்வா கையும், களவுமாக பிடிபட்டார். சில்வாவை போலீசார் வேடத்தை கலைக்க சொல்லியுள்ளனர்.

இதனையடுத்து, இவர் பெண் வேடம் அணிவதற்கான இந்த மேக்கப் பொருட்கள் எவ்வாறு வந்தது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இவரது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.