தூத்துக்குடி மாவட்டத்திற்கு நவம்பர் 2-ஆம் தேதி விடுமுறை

தூத்துக்குடி மாவட்டத்திற்கு நவம்பர் 2-ஆம் தேதி விடுமுறை

திருச்செந்தூரில் சூரசம்ஹார திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு நவம்பர் 2-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருசெந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் வருகின்ற 28 -ஆம் தேதி கந்த சஷ்டி தொடங்குகிறது.இந்த கோயிலின் முக்கியமான திருவிழாவாக கந்த சஷ்டி கருதப்படுகிறது.இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நவம்பர் 2-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதனையொட்டி  தூத்துக்குடி மாவட்டத்திற்கு நவம்பர் 2-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Join our channel google news Youtube