நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை!

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், நேற்று முன்தினம் நீலகிரியின் மூன்று தாலுக்காக்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார், அம்மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா.

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் இன்றும் கனமழை பெய்து வருகிறது. இதனால் நீலகிரி மாவட்டத்தின் ஊட்டி, கூடலூர், பந்தலூர், குந்தா தாலூக்காவிற்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து, அம்மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார். நீலகிரி அவலாஞ்சி பகுதியில் ஒரே நாளில் 40 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.