மார்ச் மாதம் முழுவதும் தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தி வரும் வருகிறது. தற்போது இந்தியாவில் பரவ தொடங்கி கொரோனா வைரசால் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 90-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய , மாநில அரசு கொரோனோ வைரஸை தடுக்க தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தொடக்க பள்ளிகளுக்கும் வருகின்ற மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.