டெஸ்ட் போட்டியில் சச்சினை பின்னுக்கு தள்ளிய ஹிட் மேன் , மாயங்க் அகர்வால்..!

இந்தியா , தென்னாபிரிக்கா இடையே மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினதில் உள்ள ராஜசேகர ரெட்டி மைதானத்தில் தொடங்கியது.
இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி நேற்றைய ஆட்ட முடிவில் விக்கெட்டை இழக்காமல் 202 ரன்கள் எடுத்தது. இதை தொடர்ந்து இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி 389 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை கொடுத்து விளையாடி வருகிறது.
இதில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 176 ரன்கள் அடித்தார். மாயங்க் அகர்வால் 176 ரன்களுடன் களத்தில் விளையாடி வருகிறார்.இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக  அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்களின் பட்டியலில் சச்சினை மயங்க அகர்வால் , ரோஹித் இருவரும் பின்னுக்கு தள்ளி உள்ளனர்.
சேவாக் – 319
மாயங்க் அகர்வால் -176*
ரோஹித் – 176
சச்சின் – 169

author avatar
murugan