சர்வேதேச டி 20 போட்டியில் புதிய சாதனை படைத்த முதல் இந்திய வீரர்..!

சர்வேதேச டி 20 போட்டியில் புதிய சாதனை படைத்த முதல் இந்திய வீரர்..!

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே மூன்று டி 20 போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகின்றனர்.கடந்த 03-ம் தேதி நடைபெற்ற முதல் டி -20 போட்டியில்  பங்களாதேஷ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இன்று இரண்டாவது டி -20 போட்டி ராஜ்கோட்டில் உள்ள செளராஷ்டிரா மைதானத்தில் நடைபெற்ற உள்ளது.இப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விளையாடும் 100-வது சர்வேதேச டி 20 போட்டியாகும்.
இந்திய அணி சார்பில் இந்த சாதனையை படைத்த முதல் வீரர் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற்று உள்ளார்.இந்திய அணியில் முன்னாள் கேப்டன் டோனி 98 போட்டிகளிலும் , விராட் கோலி 93 போட்டிகளிலும் விளையாடி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan
Join our channel google news Youtube