இந்தியை திணித்து விடவேண்டும் என பாஜகவினர் முயற்சித்து வருகின்றனர் – மு.க.ஸ்டாலின்!

இந்தி தினமான இன்று மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக தலைவருமான அமித்ஷா பேசுகையில்,  இந்தியா பன்முகம் கொண்ட நாடுதான். இருந்தாலும், இந்தியாவில் ஒரே நாடு ஒரே மொழி இருக்க வேண்டும். இந்தியாவை ஒருங்கிணைக்க ஹிந்தியால் மட்டுமே முடியும். அப்போதுதான் இந்தியாவிற்கு ஒரே அடையாளமாக ஹிந்தி இருக்கும். என குறிப்பிட்டார்.

இதற்கு தமிழகத்தில் கடுமையாக எதிர்ப்பு கிளம்பி வருகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ‘ எப்படியாவது ஹிந்தியை இந்தியா முழுவதும் திணித்துவிட வேண்டும் என முயல்கின்றனர்.’ என தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.