சுற்றுலா பயணிகளுக்காக ஹெலிகாப்டர் சேவை..!

அமைச்சர் எஸ்.பி வேலுமணி , கோவை துடியலூர் அருகே சுற்றுலா பயணிகளுக்காக, தனியார் நிறுவனம் அறிமுகப்படுத்திய ஹெலிகாப்டர் சேவையை தொடங்கி வைத்தார்.

ஜெஸ்பிளை ஏவியேசன் சார்பில் சுற்றுலா ஹெலிகாப்டர் சேவை கங்கா செவிலியர் கல்லூரியில் தொடங்கியது.

இதில் பயணிக்க 10 நிமிடங்களுக்கு நான்காயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கோவையில் மருதமலை, வெள்ளிங்கிரி மலை, பேரூர், செட்டிபாளையம் கோல்ப் மைதானம், லோட்டஸ் டெம்பிள் உள்ளிட்ட இடங்களை ஹெலிகாப்டரில் பயணித்தபடி கண்டுரசிக்கலாம்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment