நீலகிரி மாவட்டத்தில் கனமழை தொடரும் – வானிலை மையம்

நீலகிரி மாவட்டத்தில் கனமழை தொடரும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வரமாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை புறநகர் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

இதற்கிடையில் நீலகிரி மாவட்டம் தேவாலா மற்றும் பந்தலூர் பகுதியில் கனமழை பெய்ததால் புளியம்பாறையில் கோழிக்கொல்லி கிராமத்திற்கு செல்லும் தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது தரைப்பாலம் அடித்துச்செல்லப்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.