ஆக்ராவில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை! மும்தாஜ் கல்லறை சேதம்!

மும்தாஜ் அடக்கம் செய்யப்பட்ட பளிங்கு கற்களால் ஆன கல்லறையின் மேற்கூரை சேதமடைந்தது.

நேற்றிரவு, உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் சூறைக்காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மரங்கள் வேறோடு சாய்ந்தன. இதனால், உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹாலும் இந்த காற்று மற்றும் மழையில் சேதமடைந்துள்ளது.

இதனையடுத்து, தாஜ்மகாலில் இடி தாக்கிய நிலையில், மும்தாஜ் அடக்கம் செய்யப்பட்ட பளிங்கு கற்களால் ஆன கல்லறையின் மேற்கூரை சேதமடைந்தது. மேலும், தாஜ்மகாலை சுற்றி பளிங்கு கற்களால் அமைக்கப்பட்ட தடுப்புகள், மண்பாண்ட அடுக்குகளில் மேற்புரத்தில் உள்ள இரண்டு மண்குடுவைகள் சேதமடைந்துவிட்டதாக தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வியாழக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் தாஜ்மகாலுக்கு செல்லும் நடைபாதையில் விரிசல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.