3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

3 நாட்களுக்கு  தமிழகம் மற்றும் புதுவையில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.இந்தநிலையில் தமிழகம், புதுச்சேரியில் நவம்பர் 30, டிசம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னையில் 3 நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு இலங்கையின் தெற்கு கடல் பகுதியில் சூறாவளி காற்று வீச இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று  வானிலை ஆய்வு  மையம்  எச்சரிக்கை விடுத்துள்ளது.

Join our channel google news Youtube