தென் தமிழகத்தில் ஒருசில இடத்தில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

தென் தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதால் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆராச்சி மையம் தெரிவித்துள்ளது.