24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம்

24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம்

தமிழகம், புதுவையின் பெரும்பாலான பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு  மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்,   மேற்கு மத்திய வங்கக்கடல், அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக 24 மணி நேரத்திற்கு  தமிழகம், புதுவையின் பெரும்பாலான பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை, கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, அரியலூர், பெரம்பலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சிவகங்கை, ராமநாதபுரம், நாமக்கல், சேலம், புதுக்கோட்டை, குமரியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது.

Join our channel google news Youtube