கனமழை எதிரொலி ..! தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..!மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
மழை தொடர்பாக  சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் , தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், நாளை மறுநாள் வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல் உள்ளதாகவும், கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் மலை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்நிலையில் தூத்துக்குடியில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.  கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

Leave a Comment